அனைவருக்கும் 79வது சுதந்திர தினவிழா நல்வாழ்த்துகள். இன்று நமது பள்ளியில் (15.08.2025) சுதந்திரதினவிழா நிகழ்வு கோலாகலமாகக்கொண்டாடப்பட்டது. முதுகலை தமிழாசிரியர் பெசிமா அவர்களின் இறைவேண்டலுடன் விழா ஆரம்பித்தது. உதவித்தலைமைஆசிரியர் ஜாண் சாமுவேல் அவர்கள் வேதப்பகுதியை வாசித்தார்கள். 79வது சுதந்திர தின விழாக்கொடியினை நம் பள்ளியின் தாளாளர் திரு.ஜேகர் அவர்கள் ஏற்றி வைத்தார்கள். தலைமைஆசிரியர் திரு.வெஸ்லி சாலமோன் அவர்கள் தலைமை உரையாற்றினார்கள். பட்டதாரி தமிழாசிரியர் சாமுவேல் ஜெபக்குமார் அவர்கள் சிறப்புரையாற்றி விழா நிகழ்வுகளையும் தொகுத்து வழங்கினார்கள். தொடர்ந்து பல்வேறு கலை நிகழ்வுகள் நடைபெற்றது. மாணவர்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர். பள்ளியின் ஓவிய ஆசிரியர் சாமுவேல் அவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்கள். கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. விழா இனிதே நிறைவுபெற்றது.






