சி.சி.எம் மேல்நிலைப் பள்ளியில் 18.08.2025 திங்கள் காலை கூட்டுப் பிரார்த்தனையில் பள்ளித் தாளாளர் திரு. ஜேகர் அவர்கள் கலந்து கொண்டு வள்ளியூர் மரியா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்ற பள்ளி மாணவிகளுக்கான கவிதை, ஓவியம், நடனம் மற்றும் கட்டுரைப் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்கள்.
இதில்
12ம் வகுப்பு S. அதிசய ஜோஸ்லின் கவிதைப் போட்டியில் முதல் பரிசு
11 ம் வகுப்பு M. ஒவியா தனி நடனத்தில் முதல் பரிசு
அது மட்டுமல்லாமல் அனைத்து போட்டிகளிலும் அதிக புள்ளிகள் பெற்றமைக்காக ( OVERALL CHAMPIONSHIP ) சுழற்கோப்பையும் சி.சி.எம்.மேல்நிலைப் பள்ளிக்கு வழங்கப் பட்டது.
இப் பரிசுகளை தாளாளர் வழங்க மாணவிகள் பெற்றுக் கொண்டனர்.
தொடர்ந்து திருநெல்வேலி மாவட்டம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை சார்பில் சர்வதேச போதைப் பொருள் மற்றும் சட்டவிரோத கடத்தல் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு போதைப்பொருள் ஒழிப்பதை நோக்கம் மட்டுமல்லாமல் பொதுமக்களுக்கு போதைப்பொருள் ஒழிப்பு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி சிறப்பாக செயல்பட்டதற்காக சி.சி.எம். மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர் குழுவிற்கு ( NSS VOLUNTEERING TEAM ) திருநெல்வேலி மாவட்ட அளவில் மூன்றாவது பரிசு மற்றும் ரூ. 5000 பெற்றதற்க்கான காசோலையை தாளாளர் வழங்க பள்ளியின் NSS ஒருங்கிணைப்பாளர் திரு. A. ஜான் சாமுவேல் ஆசிரியர் மற்றும் NSS மாணவர்கள் பெற்றுக் கொண்டார்கள்.
தொடர்ந்து பரிசு பெற்ற மாணவ மாணவிகளையும் அவர்களுக்கு பயிற்சி கொடுத்த ஆசிரிய பெருமக்களையும் தலைமையாசிரியர் அவர்கள் பாராட்டினார்கள்.

