பள்ளியின் தேசிய பசுமைப் படை 2025

இடையன்குடி சி.சி.எம் மேல்நிலைப் பள்ளியில் 08.09.2025 அன்று பள்ளியின் தேசிய பசுமைப் படை சார்பாக மரம் நடுவிழா கொண்டாடப்பட்டது.  மாணவர்கள் பள்ளிக்கென பல்வேறு மரம் மற்றும் செடி வகைகளைக் கொண்டு வந்திருந்தனர்.  மாணவர்களுக்கு மரம் வளர்ப்பதில் உள்ள நன்மைகளை தலைமை ஆசிரியர் எடுத்துரைத்தார்கள்.  உதவித்தலைமை ஆசிரியர், பசுமையே உலகின் தேவை என வலியுறுத்தினார்கள்.  மாணவர்கள் மரங்கள் நடுவதில்  மிகுந்த ஆர்வம் காட்டினார்கள். தொடர்ந்து மரங்களை நட்டு பராமரிப்போம் என உறுதி அளித்தார்கள்.  நிகழ்வுக்கான ஏற்பாடுகளை பசுமைப் படை பொறுப்பாசிரியர் ஜெபக்குமார் மற்றும் பசுமைப்படை உறுப்பினர்களாகிய மாணவர்கள் இணைந்து செய்திருந்தனர்.

002 00121 22 23 24 25 26 27 28 29 30 31 32

Leave a Reply